தஞ்சாவூர்.ஆகஸ்ட் 24
தஞ்சாவூரில் உலக நாட்டுப்புற கலைதின விழாவையொட்டி தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் நடந்த ஊர்வலத் தில் 800 நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில் உலக நாட்டுப்புறக் கலை தின விழா 2024 கொண்டாடப் பட்டது.
தஞ்சாவூர் முனிசிபல் காலனி யில் இருந்து ஊர்வலம் தொடங்கி 800 மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர் கள் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் நாட்டுப்புற இசைக்கருவிகளை இசைத்தும் கலைஞர்கள் நடனமாடியபடியும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியினை அரசு சிறப்பு வழக்கறிஞர் இளஞ்செழியன் ராமநாதபுரம் ஊராட்சி தலைவர் குழந்தையம்மா ள், நீலகிரி ஊராட்சி மன்ற தலைவர் வள்ளியம்மை பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். நாட்டுப்புறக் கலைஞர்கள் ஊர்வலம் ஈஸ்வரி நகர் மருத்துவகல்லூரி சாலை வழியாக தென்னக பண்பாட்டு மையத்தை அடைந்தது.
பின்னர் ஊர்வலத்தில் கலந்து கொண்ட நாட்டுப்புற கலைஞர்களி ன் வண்ணமயமான கலை நிகழ்ச்சி தென்னகப் பண்பாட்டு மையத் திறந்தவெளி கலையரங்க த்தில் நடந்தது. தென்னகபண்பாட் டு மைய இயக்குனர் கோபால கிருஷ்ணன் ஆணையின்படி தென்னக பண்பாட்டு மைய நிர்வாக அலுவலர் சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தின ராக தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் காந்தி கலந்துகொண்டு பேசினார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி அலுவலர் உமா சங்கர் மற்றும் தென்னகப் பண்பாட்டு மைய அனைத்து அலுவலர்களும் செய்திருந்தனர்.