அருமனை, நவ- 27
கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் செல்வன் (40). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி ஜெயகுமாரி. இந்த தம்பதிக்கு 14 மற்றும் 12 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். செல்வன் நீண்ட நாட்களாகவே கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். சிகிட்சையில் இருந்த அவர், கடந்த சில நாட்களாக மிகுந்த மனவிரத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்ற செல்வன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதை கண்ட மனைவி விஜயகுமாரி மற்றும் மகன்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்த கடையாலுமூடு போலீசார் விரைந்து சென்ற செல்வனின் உடலை மேட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.