கருங்கல், ஜன – 14
கருங்கல் அருகே பாலூர் பகுதியை சேர்ந்தவர் யுவானிஸ் மனைவி நளின குமாரி (58). இவரது சகோதரர் ரதீஷ் (42) வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு ரதீஷ் சகோதரியின் 23 பவன் தங்க நகைகளை வாங்கியுள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் பிரதீஸ் நகைகளை திரும்ப கொடுக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் பத்து பவுன் நகைகளை வாங்கி சென்றுள்ளனர்.
தற்போது நகைகளை திரும்பி கேட்ட பின் திருப்பி தர முடியாது என்று சென்றுவிட்டனர். இது குறித்து நளினகுமாரி கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் எந்த எடுக்காததால் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்..இது சம்பந்தமாக விசாரணை நடத்த எஸ் பி உத்தரவிட்டார்.
இதற்கிடையில் இரணியல் நீதிமன்றத்தில் நளினகுமாரி வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன் பெயரில் தற்போது ரதீஸ் மற்றும் அவரது மனைவி ரமலா ராணி ஆகியோர் மீது கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.