நாகர்கோவில் அக் 20
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் ஆயுதப்படை காவலர்களுக்கு வாராந்திர கவாத்து கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் காவல் கண்காணிப்பாளர் ஆயுதப்படை காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார். காவலர்களின் குறைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதில் நாகர்கோவில் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் லலித்குமார், மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் ஜோசப் மற்றும் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டனர்.