திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு வட்டாரம், சீலப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட சீலப்பாடி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தாடிக்கொம்பு வட்டார மருத்துவ அலுவலர் மரு.அ.சீனிவாசன் தலைமை தாங்கி மருத்துவ முகாமின் திட்ட விளக்க உரையாற்றினார் .
வடக்கு ஒன்றிய திமுக செயலாளர்
த.நெடுஞ்செழியன் மற்றும் சீலப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் A.மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பொதுமக்களுக்கு பொது மருத்துவம்,பல் , காது,மூக்கு ,தொண்டை சித்த மருத்துவம், HIV பரிசோதனை வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் காசநோய் போன்றவைகளுக்கான மருத்துவ பரிசோதனைகளுடன் இருதய நோய் ,சர்க்கரை நோய், புற்றுநோய் முதியோர்க்கு தேவையான பரிசோதனைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது, மேலும் தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த முகாமில் பொதுமக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியை சீலப்பாடி மருத்துவ அலுவலர் மரு.அம்ரிதா தலைமையில் நடைபெற்றது .
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர் முருகேசன், மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.