திருப்புவனம்:பிப்:24
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் அஞ்சூர் நாடு பூவந்தி கிராமத்தில் எழுந்தருளிருக்கும் ஸ்ரீ அய்யனார்
ஒய்யவந்தாள் அம்மன் கோவில் இரண்டாம் ஆண்டு வருடாபிஷேகத்தை முன்னிட்டு இரண்டாம் ஆண்டு வட மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, மாவட்டத்தைச் சேர்ந்த 15 காளைகள் மற்றும் 135 வீரர்கள் பங்கு பெற்றனர். சுமார் 25 நிமிடங்கள் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்ற காளை, மற்றும் வீரர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் வீரர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியை விழா கமிட்டியாளர்கள் மற்றும் பூவந்தி கிராமம் பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.