கன்னியாகுமரி ஏப் 8
சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் கன்னியாகுமரியில், சுற்றுலா பயணிகள் அதிகம் நடமாடும் பகுதியில் மின்வாரிய பெட்டி பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிலையத்திற்கு எதிரே, மின்வாரியத்துக்குச் சொந்தமான இணைப்பு பெட்டி ஒன்று பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த பகுதியில் தினமும் எண்ணற்ற சுற்றுலா பயணிகள் வருகை தருவதால், கூட்ட நெரிசல் நேரங்களில் பயணிகள் இந்தப் பெட்டியை தவிர்க்க முடியாமல் கடந்து செல்வதாகவும், சிலர் அறியாமலே அதைத் தொட்டும் , தள்ளிக்கொண்டும் செல்கின்றனர்.
இதனால் எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த இணைப்பு பெட்டியை முறையாக சீரமைத்து, அதன் சுற்று பாதுகாப்பு அறனை அமைக்க வேண்டியதாயிருக்கிறது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.