அமைச்சர் கே .ஆர். பெரியகருப்பன் நிதி உதவி வழங்கினார்.
திருப்பத்தூர்:டிச:27
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் திருக்கோஷ்டியூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சௌமிய நாராயணன் திருக்கோவிலின் திருப்பாற்கடலில் கடந்த (08.12.2024) அன்று திருக்கோஷ்டியூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயலெட்சுமி அவர்களின் மகன்கள் விஷ்ணு மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஆகிய இரு சிறார்களும் குளிக்கச் சென்ற பொழுது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இவை தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இரண்டு சிறார்களின் குடும்பத்தினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து, இறப்பு நிவாரண நிதியாக தலா ரூ.1.00 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கிட உத்தரவிட்டார்.
அதன்படி, தலா ரூ.1.00 இலட்சத்திற்கான காசோலையினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அவர்களுடன் நேரில் சென்று அச்சிறார்களின் தாயாரிடம் வழங்கியதுடன் தனது சொந்த நிதியிலிருந்தும் ரூ.02.00 இலட்சம் உதவித்தொகையினை வழங்கி, ஆறுதல் கூறினார். மேலும் அச்சிறார்களின் தாயாரின் கோரிக்கைக்கிணங்க, அவரின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு தேவையான உதவிகளும் மேற்கொள்ளப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன். நேரில் சென்று அக்குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.கேசவதாசன் திருப்பத்தூர் வட்டாட்சியர் மாணிக்கவாசகம் உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.