மதுரை எம் ஜி ஆர் (மாட்டுத்தாவணி) பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை கோட்ட முன்பதிவு விசாரணை மையம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு விசாரணை மையங்களில் திடீரென போக்குவரத்து துறை அமைச்சர் பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள் பயணிக்க ஏதுவாக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் குறித்து ஆய்வு செய்தார்.
மேலும் அனைத்து வழித்தடத்திலும் சிறப்பு பேருந்துகள் இயக்கங்கள் குறித்தும் ஆய்வு செய்தார்கள், முன் பதிவு செய்துள்ள பயணிகளிடையே பேருந்து வசதிகள் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார்கள் போக்குவரத்து துறை அமைச்சர் ஆய்வின் பொழுது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை கோட்ட போக்குவரத்து கழக அதிகாரிகள் உடன் இருந்தார்கள்.