ராமநாதபுரம், ஆக 28 திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய குழு தலைவர் புல்லாணி தலைமை வைத்தார். வட்டார வளர்ச்சி ஆணையர் ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டை இளங்கோவன் : துணைத் தலைவர் சிவலிங்கம் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) விஜயகுமார் வரவேற்றார். 61 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. பெரியபட்டினம் ஊராட்சியில் தற்போது நிலவும் தண்ணீர் பிரச்னையை போக்க இங்குள்ள கப்பலாறு, சாலைவலசை ஊரணிகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென
ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ் கான்
பேசினார். மாயாகுளம் ஊராட்சி செயலர் பணியில் அலட்சியம் காட்டி வருவதால், இணைய தள வருவாய் இன வரி அச்சிட்ட ரசீது மூலம் மக்களிடம் வசூலிக்கப்படும் முறைகேட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என துணை தலைவர் சிவலிங்கம் பேசினார்.