தென்தாமரைகுளம்., டிச. 27.
தென்தாமரைகுளத்தில் அமைந்துள்ள அகிலத்திரட்டு அம்மானை அருளிய மூலப்பதியான தாமரைகுளம் பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா
கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கி இந்தமாதம் 5-ம் தேதிவரை நடைபெற்றது. அதன்பிறகு
23-ம்தேதி மீண்டும் தொடங்கி 29-ம் தேதி வரை நடக்கிறது.
12-வது நாளான இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை,மாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை,5 மணிக்கு அய்யாவுக்கு திருகல்யாண வைபோக திரு ஏடுவாசிப்பு,இரவு 8 மணிக்கு
மணவறை வாகனத்தில் பதிவலம் வருதல், 9மணிக்கு அன்னதர்மம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது
13-வது நாள்திருஏடு வாசிப்பு விழாவான நாளை சனிக்கிழமை,காலை 6 மணிக்குஅய்யாவுக்கு பணிவிடை
மாலை 4 மணிக்குஅய்யாவுக்கு பணிவிடை 4.10 மணிக்கு பகவதி, பார்வதி, மண்டைக்காட்டம்மை திருமண வைபோகம். திரு ஏடுவாசிப்பும்நடக்கிறது,இரவு 8 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதிவலம் வருதல்,இரவு 9மணிக்கு அன்னதர்மம் வழங்குதலும் நடக்கிறது
14-வது நாளான ஞாயிற்றுக்கிழமை
காலை 6. மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை,நண்பகல் 12. மணிக்கு
அய்யாவுக்கு உச்சிப்படிப்பு, பால்தர்மம்,மாலை 4 மணிக்கு
அய்யாவுக்கு பணிவிடையும்
மாலை 4.10 மணிக்கு
பூமடந்தை திருக்கல்யாண வைபோகம், பட்டாபிஷேகம், திருஏடுவாசிப்பும் இரவு 8 மணிக்கு அய்யா செங்கருட வாகனத்தில் தெருவீதி பவனி வருதல்,இரவு 9 மணிக்கு
,அன்னதர்மம் வழங்குதலுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார்,பரம்பரை குருமார்கள்மற்றும் அய்யாவின் அன்புக்கொடி மக்கள் செய்து வருகின்றனர்.