மார்த்தாண்டம், மார்-2
மார்த்தாண்டம் அருகே நட்டாலம், கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவருக்கு ஜோஸ் (42), ஷாஜி (34) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ஜோஸ் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ஜோஸ் தனது தம்பி ஷாஜிக்கு மருத்துவ செலவு பணம் கொடுத்துள்ளார். பின்னர் கொடுத்த பணத்தை தம்பியிடம் திருப்பி கேட்டுள்ளார்.
இதனால் அண்ணன் தம்பிக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த ஷாஜி அண்ணன் என்றும் பாராமல் இரும்பு கம்பியால் ஜோசை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஜோஸ் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் ஷாஜி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.