அருமனை, பிப்- 7
அருமனை அருகே சிதறால் பகுதியை சேர்ந்தவர் சுனில் (34). அதே பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின் (35). இவர் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. ரவுடிகள் பட்டியலிலும் உள்ளார். நேற்று அருமனையில் உள்ள தனியார் பாரின் சுனில் மற்று அகஸ்டின் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட தாக கூறப்படுகிறது. அந்த சமயம் பாரில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.
பின்னர் ஆத்திரத்தில் இருந்த அகஸ்டின் நேற்று இரவு அரிவாளுடன் சுனில் வீட்டுக்கு சென்றார். அங்கு சுனில் தாயார் மட்டும் இருந்துள்ளார். தொடர்ந்து வீட்டின் ஜன்னலை அடைத்து உடைத்து, தாயாரை மிரட்டி விட்டு சென்றார்.
இதனை அறிந்த சுனில் அகஸ்டின் வீட்டிற்கு சென்று ஜன்னலை உடைத்ததாகவும் தெரிகிறது. இது குறித்து சுனிலின் தாய் அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் அருவாளுடன் வந்து மிரட்டியதாக ஆகஸ்டிணை போலீசார் கைது செய்தனர். மேலும் அகஸ்டின் வீட்டை தாக்கி விட்டு தலைமறைவான சுனிலை தேடி வருகின்றனர்.