அகரம் தென்
பிப்ரவரி 14
செங்கல்பட்டு மாவட்டம் அகரம் தென் ஊராட்சி பகுதியில் வேல்ஸ் பல்களை கழகத்தின் சார்பாக மூன்றாம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சட்ட உதவி முகம் மற்றும் பொது விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது
இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் மற்றும் எழும்பூர் பூந்தமல்லி மற்றும் தாம்பரம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் பி.ஆர்.தினேஷ்குமார், எஸ்.ஆதிகேசவன், எஸ்.பவானி, சாந்தசீலன், நிஷா, ஆர்.சங்கர் சுப்பிரமணியம், எஸ்.சித்ரா, கே.மைதிலி ஆகியோர் கலந்து கொண்டு சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை எவ்வாறு அதை பயன்படுத்த வேண்டும் அதை சுட்டிக்காட்டி சிறப்புரையாற்றினார் இதில் ஏராளமான நரிக்குறவர்கள் பெண்கள் ஆண்கள் குழந்தைகள் உட்பட ஆர்வமாக பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்