தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் சதிஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 600 மனுக்கள் அளித்தனர். மனுக்கள் மீது உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் பணியிடத்து விபத்து மரணமடைந்த இரண்டு தொழிலாளர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.2.05 லட்சம் வீதம் மொத்தம் ரூ.4.10 லட்சம் மதிப்பில் உதவித்தொகைக் கான ஆணைகளை ஆட்சியர் வழங்கினார். மேலும் குரூப் -4 தேர்வில் தேர்ச்சி பெற்று பேரூராட்சிகள் து
றையில் பணி நியமனம் செய்யப்பட்ட
4 பேருக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியர் வழங்கினார். கூட்டத்தில் டிஆர்ஓ கவிதா, தனித்துணை ஆட்சியர் சுப்பிரமணி, உதவி இயக்குனர் கணேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சையது முகைதீன்
இப்ராஹிம், மாவட்ட வழங்கல் அலுவலர் செம்மலை மற்றும் அரசு த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
குறைதீர்க்கும்கூட்டம் ஆட்சியர் சதிஷ் தலைமையில்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics