கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஜூன் மூன்றாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 க்கு 40 வெற்றி பெற்றது. தென் சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன் மொத்தம் 516,628 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதையடுத்து சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் தலைமையில் சோழிங்கநல்லூர் மத்திய பகுதியில் 198 வது வார்டு கழக செயலாளர் தேவகுமார் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தார். அப்போது திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.