ஈரோடு, ஜூன் 24
தமிழகத்தில் 2026 ல் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா கூறினார். ஈரோடு தமிழ் மாநில காங்கிரஸ் மத்திய மாவட்டம் சார்பாக சார்பாக யுவராஜாவின் 43 வது பிறந்தநாளை முன்னிட்டு அரசன் கண் மருத்துவமனையுடன் இணைந்து ஈரோடு மரப்பாலம் சிஎஸ்ஐ மருத்துவமனையில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. அதை துவக்கி வைத்த பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு
கள்ளக்குறிச்சியில் 55 க்கும் மேற்பட்டோர் விஷ சாராயம் அருந்தி இறந்துள்ளனர். இதற்கு காவல்துறை தோல்வியே காரணமாகும். காவல்துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளில் பல்வேறு பொய்காரணங்களையும் கூறி பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றனர்.சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்த பிறகு முதலமைச்சர் வந்து பதில் அளிக்கிறார். சட்டமன்றத்தில் எதிர் கட்சிகள் பேச அனுமதிப்பதில்லை. எதிர்க் கட்சிகள் பேச்சை ஒளிபரப்ப கூடாது என்று பத்திரிகையாளர்களை சபாநாயகர் எச்சரிக்கிறார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவது என்ன என்று கூட மக்களுக்கு காட்டுவதில்லை.இது என்ன ஜனநாயகம். உண்மையில் ஸ்டாலின் தான் பெரிய சர்வாதிகாரி. இந்நிலைமை தொடராது.
2026 ல் மக்கள் இந்த அரசுக்கு தகுந்த பாடம் கற்பிப்பார்கள். இதன் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படும்
இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் கட்சி செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் மத்திய மாவட்ட இளைஞர் அணி தலைவர்
ரமேஷ், நிர்வாகிகள் சிவானந்தம், மாயா, சக்தி, மற்றும் சஞ்சய் உட்பட பலர் கலந்து கொண்டனர். சுமார் 300 பேர் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.