தமிழ்நாடு உரிமை மீட்பு கூட்டமைப்பு சமூக சமத்துவ செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து புரட்சியாளர் டாக்டர். அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சமத்துவ மாட்டுக்கறி விருந்து வழங்கி கொண்டாப்பட்டது. இந்நிகழ்வில் புரட்சியாளர் டாக்டர். அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளுவர் பேரவையின் தலைவர் இரா, கணேசன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட தலைவர் இரா.அந்தோணி,
இந்திய தேசிய ஒருமைப்பாட்டு இயக்கத்தின் மாநில தலைவர் எ.அப்துல்ஜப்பார், திராவிடர் கழகத்தின் சார்பாக யாழ் புலேந்திரன், சொ,மருது, பாவலர் வெள்ளைச்சாமி, மாவோ, அருட்சகோதரி, குழந்தை தெரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அ,பிரேம்ராஜா, திருமா முத்து, தலித் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட கட்சிக் கல்வி பொறுப்பாளர் வழக்கறிஞர்.செ. சிவகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.ரோக்கஸ் வளவன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமூகநீதி சமத்துவ செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகி கவிஞர்,ச, சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு உரிமை மீட்பு கூட்டமைப்பு இரா.கிருட்டிணமூர்த்தி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
தமிழ்நாடு உரிமை மீட்பு கூட்டமைப்பு

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics