கழுதைக்கு மனு கொடுக்கும் போராட்டம் தேனி மாவட்டம், ஜூன் – 29 தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட க.புதுப் பட்டியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கம்பம் நகர் மற்றும் ஒன்றியத்தின் சார்பாக கழுதைக்கு மனு கொடுக்கும் போராட்டம் க.புதுப்பட்டி பேருந்து நிறுத்தத்தின் அருகில் நடைபெற்றது இப்போராட்டத்தில் இந்திரா நகர் காலனியில் பல இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கழிப்பறையை திறக்க கோரியும் 540 – Go மூலம் கொடுக்கப்பட்ட புகார் மனு ஊத்துக்காடு அரசு ஓடை புறம்பு கல் சர்வே எண். 954/3 ஆக்கிரமப்பை உடனடியாக அகற்ற கோரியும் மற்றும் இது தொடர்பாக முதல்வருக்கு ஒரு முறை மனுவும் கலெக்டருக்கு மூன்று முறை மனுவும் பேரூராட்சி உதவி இயக்குநருக்கு இரண்டு முறை மனுவும் கோட்டாட்சியர் வட்டாட்சியாக்கு இரண்டு முறை மனுவும் பேரூராட்சி செயல் அலுவலர் சேர்மன் ஆகியோருக்கும் மனு கொடுத்து எவ்வித நடவடிக்கை எடுக்காத க.புதுப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இவ் ஆர்பாட்டத்துக்கு போத்திராஜ் மாநில நிர்வாகக் குழு அவர்களின் தலைமையில் நடைபெற்றது T. பாண்டி A. ஆரோக்கியம் V.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் வே. பெத்தாட்சி ஆசாத் மாவட்ட செயலாளர் E.M.S. அபுதாகிர் மாநில நிர்வாகக் குழு ஆகியோர் கண்டன உரையாற்றினர் கழுதைக்கு மனு கொடுப்போர் R. ஹஜ் முகமது R.ராஜாராமன் K.முத்து S.பொன்னுச்சாமி K. கணேசன் M.செல்வம் ஆகியேர்கள் இப்போராட்டத்துக்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் முக்கிய பொறுப்பாளர்கள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கழுதைக்கு மனு கொடுக்கும் போராட்டம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics