கிருஷ்ணகிரி,ஜுன்.16- தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க பொதுப்பணித்துறை அமைச்சர் துறைமுருகன் ஆலோசனையின் பேரில் மழை காலத்திற்கு முன்பு கால்வாய்கள் ஏரி கரையை பலப்படுத்தல் உள்ளிட்ட பணிகள் விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. எம். சரயு உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் ஆட்சி தலைவர் வந்தனா கார்க் அறிவுரைத்தலின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சி குண்டுப்பட்டி ஏரியை அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கரையை பலப்படுத்துதல் பணி மற்றும் கோடி புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை ஊராட்சி மன்ற தலைவர் எஸ் ஆர். ரங்கநாதன் பார்வையிட்டு வருகிறார்.
புளியம்பட்டி ஊராட்சியில் குண்டுப்பட்டி ஏரிக்கரை பலப்படுத்தும் பணி

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics