காரியாபட்டி ஜூன் :18
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மந்திரி ஓடை கிராமத்தில் ஸ்ரீ வாழவந்த அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது –
இக்கிராமத்தில் மிகவும் பழமையான ஸ்ரீ வாழவந்த அம்மன் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ விநாயகர் கோயில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 16 ஆம் தேதி காலை மங்கள இசையுடன் விக்னேஷ்வர பூஜை மகாசங்கல்பம் புண்யாஹவசனம் கும்பபூஜை கணபதி ஹோமம் லெட்சுமி ஹோமம் நவக்கிரக ஹோமம் முதல் கால பூஜைகள் தொடங்கப் பட்டது. இரவு மகா சங்கல்பம் கும்ப அலங்காரம் யாகசாலை பிரவேசம் அங்கு ராப்பணம் ரஹ் சாபந்தனம் யந்திர ஸ்தாபனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காலை மணியளவில் புனித நீர் குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வாழ வந்தம்ன் கோபுர கலசங்களுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பிறகு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டது.
இவ்விழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து கும்பாபி ஷேகத்தை கண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பங்கேற்ற பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.