தஞ்சாவூர் ஜூன் 11
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2006 வழக்குகளில் ரூபாய் 14.54 கோடி அளவுக்கு தீர்வு காணப்பட்டு வழக்காடுகளுக்கு பெற்றுத் தரப் பட்டது.
தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணை ந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத் தில் உள்ள கீழமை நீதிமன்றங்க ளில் நிலுவையில் உள்ள வழக்கு களை சமரசமாக பேசி தீர்வு காண்ப தற்காக தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது நிகழ்வுக்கு மாவட்ட முதன்மை நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத்தலைவருமான பூரண ஜெய ஆனந்த் தலைமை வகித்தார்.
கூடுதல் மாவட்ட நீதிபதி சுந்தரராஜன் குற்றவியல் விரைவு நீதிமன்ற நடுவர் சோழவேந்தன் வழக்குரைஞர் திராவிடச் செல்வன் ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வில் குடும்ப நல வழக்குகளு க்கு தீர்வு காணப்பட்டது
சிறப்பு மாவட்ட நீதிபதி வடிவேலு இரண்டாவது குற்றவியல் நீதித் துறை நடுவர் ராஜேஸ் கண்ணன் வழக்குரைஞர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கொண்ட இரண்டாவது அமர்வில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
கூடுதல் சார்பு நீதிபதி முருகன் மாவட்ட உரிமையியல் நீதிபதி பாரதி, வழக்குரைஞர் மகாலட்சுமி ஆகியோர் கொண்ட மூன்றாவது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு ஆகிய வட்ட சட்டப்பணிகள் குழுவின் அமர்வுகளிலும் விசாரணை நடத்தப்பட்டது.
இவற்றின் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 3930 வழக்குகள் விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 2006வழக்குகளுக்கு தீர்வு காணப் பட்டு ரூபாய் 14 கோடியே 54 லட்சத் து 63 ஆயிரத்து 416 அளவுக்கு தீர்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவ ரும் மாவட்ட நீதிபதியுமான ஜெயஸ்ரீ, முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சத்யதாரா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும் சார்பு நீதிபதியுமான இந்திரா காந்தி, தஞ்சாவூர் வழக்குரைஞர்கள் சங்க தலைவர் தியாக காமராஜ், செயலர் சுந்தர் ராஜன், ஆணைக்குழு நிர்வாக அலுவலர் சந்தோஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்