தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் ஆபத்தான் இடத்தில் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும்
மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
தஞ்சாவூர்.செப்.24.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் ஆபத்தான இடத்தில் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தி உள்ளார்.
தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப் பதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள காவிரி, வெண்ணாறு ,கல்லணை, கால்வாய் உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் முழு கொள்ளளவும் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் பகுதியாகவும் செல்கிறது. பொது மக்கள் யாரும் ஆழமான நீர் நிலை பகுதிகளில் குளிக்கவோ நீச்சல் அடிக்கவோ மீன்பிடிக்கவோ மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கை களிலோ ஈடுபட வேண்டாம்.
ஆறுகளில் தண்ணீர் வறுத்து அதிகமாக உள்ள இடங்களிலும் அபாயகரமான இடங்களிலும் செல்பி எடுப்பதையும் ,இரவு நேரத்தில் ஆற்றில் இறங்குவதை யும் தவிர்க்க வேண்டும்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் கள் நண்பர்களுடன் ஆற்றில் ஆழமான பகுதிகளில் இறங்கி குளிக்க செல்லக்கூடாது சில நேரங்களில் ஆறுகளில் சுழல் ஏற்பட்டு அதில் மாட்டிக்கொள்ள நேரிடும் வெளியூரிலிருந்து வரும் நபர்கள் ஆற்றில் குளிக்க செல்லும் போது உள்ளூர் பொதுமக்கள் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் குழந்தைகள் நீர் நிலைக்கு செல்லாமல் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் கால்நடைகளை ஆழமான பகுதி களுக்கு அழைத்துச் செல்லாமல் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் .ஆற்றின் கரை பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஆற்றில் இறங்குவதை பொது மக்கள் முற்றிலும் தவிர்த்திட வேண்டும் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது