கன்னியாகுமரி டிச 8
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் புகையிலை ஒழிப்பு பணிகள் தீவிரம் அடைந்து உள்ளது.கன்னியாகுமரியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை கண்டுபிடிக்கப்பட்டு கன்னியாகுமரி காவல் துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரியில் ரத வீதி, கடற்கரை சாலை மற்றும் கோவளம் ஆகிய பகுதிகளில் புகையிலை விற்பனை செய்த கடைகளை உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார், உத்தரவுப்படி, அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் க.சக்திமுருகன் கன்னியாகுமரி காவல் துறை உதவியுடன் மூடி சீல் வைத்தார்.இதில் கடற்கரை சாலையில் இருந்த கடை தற்காலிக கடை என்பதால், கன்னியாகுமரி பேரூராட்சி சுகாதார அலுவலர் முருகனால் உடனடியாக அந்தக் கடை அகற்றப் பட்டது.மேலும் , புகையிலை விற்பனையில் ஈடுபட்ட மூன்று கடைகளுக்கும் தலா 25000 ரூபாய் வீதம் மொத்தம் 75000 ரூபாய் அபராதமும் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.