நாகர்கோவில் செப் 16
குமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அண்ணா விளையாட்டு அரங்கில் உள்ள குத்துச்சண்டை வளையத்தில் மேற்கூரை இல்லாமல் இருந்தது. எனவே குத்துச்சண்டை விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் மேற்கூரை அமைத்து தரும்படி நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர் காந்தி இடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். விளையாட்டு வீரர்கள் தங்கள் திறனை வளர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்த அவர். சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5,00,000 ஒதுக்கீடு செய்து அதற்கான பணி நடைபெற்று முடிவடைந்த நிலையில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் .காந்தி நேற்று குத்து விளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்து, குத்துச்சண்டை வீரர்களின் பயிற்சி விளையாட்டை தொடங்கி வைத்தார்.
மேலும் இதற்கான மின்விளக்குகள் பொருத்தி தர நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நிகழ்வில் சமூக சேவகர் அனிடைனிஸ் பாஜக நிர்வாகிகள் ஜாக்சன், சந்திரசேகர் கன்னியாகுமரி மாவட்ட குத்து சண்டை விளையாட்டு நிர்வாகிகள் ஐசக் சாம்ராஜ்,ஜஸ்டின் ராஜ்,
ஜோயல் நேச பிரபு,
ஆல்பிரட்
ஜெயசந்திரன், ராஜா,
சகாய அனி,ராஜா
பிரபு மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.