மதுரை மே 22,
புதிதாக கட்டப்பட்ட தொட்டியில் இருந்து அருவிபோல் கொட்டும் – மழைநீர்
மதுரை ஆரப்பாளையம் கூட்டுக் குடிநீருக்காக கட்டப்பட்ட தொட்டியில் தேங்கிய மழைநீரை சோதனை முயற்சி என்ற பெயரில் தண்ணீரை வெளியேற்றும் போது முன்னெச்சரிக்கையாக முறையாக பணி செய்யாமல் ரோட்டின் இரு புறமும் தண்ணீர் அருவி போல் அடித்து போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. இது போல் அலச்சியமாக நடந்ததால் தொட்டியில் இருந்து அருவி போல் கொட்டியதால் ஆனந்த குளியல் போடும் இளைஞர்கள் இது சோதனை முயற்சியில் தண்ணீரை வெளியேற்றுவதாக மாநகராட்சி தரப்பில் விளக்கம் மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய உயர் மட்ட தொட்டி அருகில் புதிதாக கூட்டு குடிநீர் திட்டத்திறகாக கட்டுமான பணிகள் நடைபெற்று வரக்கூடிய வேளையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக உயர்மட்ட தொட்டியில் தேங்கிய நீர் வெளியேற்றி
வரக்கூடிய வேளையில் அந்தப் பகுதி வழியாக சென்ற இருசக்கர நான்கு சக்கர வாகன ஓட்டிகள் உற்சாக மிகுதியில் உயர் மட்ட தொட்டியில் இருந்து வரும் தண்ணீரில் குளித்த வாரும் அந்த வழியே செல்கின்ற ஆட்டோ டிரைவர் இந்த தண்ணீரை பயன்படுத்தி தனது ஆட்டோவை சுத்தப்படுத்தும் நிகழ்வும் அரங்கேறி வந்தது. கூட்டுக் குடிநீர் உயர் மட்ட தொட்டி இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை என்றென்றும் சோதனை முயற்சியில் தற்போது தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது எனவும்
கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக தொட்டியில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் மதுரை மாநகராட்சி தரப்பில் விளக்கம்.