மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சொத்து வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி மற்றும் வரி திருத்தம் காலிமனை வரி விதிப்பு வேண்டி 11 மனுக்களும், சாலை வசதி, பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் வேண்டி 8 மனுக்களும், சுகாதாரம் தொடர்பாக 1 மனுவும், இதர கோரிக்கைகைள் வேண்டி 2 மனுக்களும் என மொத்தம் 22 மனுக்கள் பொது மக்களிடம் இருந்து மேயர் நேரடியாக பெறப்பட்டது.
இம்முகாமில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, நகர்நல அலுவலர் மரு.இந்திரா, உதவி ஆணையாளர் கோபு, செயற்பொறியாளர் (திட்டம்) மாலதி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், நிர்வாக அலுவலர் சிவகுமார். உதவி வருவாய் அலுவலர் முகம்மதுபாருக், கண்காணிப்பாளர் நம்பிராஜன், மாமன்ற உறுப்பினர்கள், உதவிப் பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்