கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், மாரம்பட்டி ஊராட்சி, கானம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தலைமையில் (13.11.2024) அன்று நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகள் சார்பில் 158 பயனாளிகளுக்கு ரூ.89 இலட்சத்து 34 ஆயிரத்து 320 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு வழங்கினார். வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, உணவுப்பொருள் வழங்கல் துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மின்சாரத்துறை, கூட்டுறவுத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், உள்ளிட்ட துறைகள் சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவது குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் பொதுமக்களுக்கு நேரடியாக எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பன்னீர்செல்வம், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் ரஜினி செல்வம், ஒன்றிய குழுத்தலைவர் உஷாராணி குமரேசன், ஊத்தங்கரை வட்டாட்சியர் திருமால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி, தவமணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ரத்தினம்மாள் சுப்ரமணி, ஊராட்சி மன்ற தலைவர் பூமலர், துணை பொது மேலாளர் அருள் மகா விஷ்ணு, வெல்பர் அசோசியேசன் உறுப்பினர்கள், சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
ஊத்தங்கரையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics