மதுரை மார்ச் 12,
மதுரை மாநகராட்சி மேயர்
தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 5 (மேற்கு) அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி திருப்பரங்குன்றத்தில் உள்ள மண்டலம் 5 (மேற்கு) அலுவலகத்தில் நடைபெற்ற, பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சொத்துவரி தொடர்பாக 17 மனுக்களும், பாதாள சாக்கடை இணைப்பு வேண்டி 20 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டி 1 மனுவும், சுகாதாரம் தொடர்பாக 4 மனுக்களும், இதர கோரிக்கைகள் தொடர்பாக 3 மனுக்களும் என மொத்தம் 45 மனுக்கள் பொது மக்களிடமிருந்து நேரடியாக மேயர் பெற்றார். இம்முகாமில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் சுவிதா, உதவி ஆணையாளர் பார்த்தசாரதி, செயற் பொறியாளர் (குடிநீர்) பாக்கியலெட்சுமி, நிர்வாக அலுவலர் இராதா, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி வருவாய் அலுவலர் சித்ரா, சுகாதார அலுவலர் திருமால், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.