மதுரை ஜூன் 26,
மதுரை மாநகராட்சி மேயர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன் வசந்த் ஆணையாளர் ச.தினேஷ்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சொத்து வரி பெயர் மாற்றம் தொடர்பாக 9 மனுக்களும், புதிய சொத்து வரி மற்றும் வரி திருத்தம் தொடர்பாக 3 மனுக்களும், காலி மனை வரி விதிப்பு வேண்டி 2 மனுக்களும், சாலை வசதி, பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் வேண்டி 17 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்ற கோரி 7 மனுக்களும், சுகாதாரம் தொடர்பாக 4 மனுக்களும், கட்டிட வரைபட அனுமதி வேண்டி 1 மனுவும், இதர கோரிக்கைகள் தொடர்பாக 24 மனுக்களும் என மொத்தம் 67 மனுக்கள் பொது மக்களிடம் இருந்து மேயர் அவர்களால் நேரடியாக பெறப்பட்டது. நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் சொத்து வரியில் பெயர் திருத்தம் வேண்டி விண்ணப்பித்த (ராமமூர்த்தி வார்டு எண்.66) மனுதாரருக்கு உடனடியாக பெயர் திருத்தம் செய்து அதற்கான ஆணையினை மனுதாரருக்கு மேயர், ஆணையாளர் ஆகியோர் வழங்கினார்கள். இம்முகாமில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி. துணை ஆணையாளர் தயாநிதி, நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார். உதவி ஆணையாளர் கோபு, செயற் பொறியாளர் (திட்டம்) மாலதி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற் பொறியாளர் காமராஜ், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், நிர்வாகஅலுவலர் சிவகுமார், கண்காணிப்பாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.