நாகர்கோவில் ஏப் 8
தெள்ளாந்தி ஊராட்சியில் கடந்த 2023-ஆம் வருடம் ஏப்ரல் மாதம் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த நேரத்தில் குடிநீர் விநியோகிப்பாளராக செயல்பட்டு வந்த கண்ணன் கோவில் கொடை விழாவில் ஏற்பட்ட பிரச்சனையை மையமாக வைத்து அன்றிலிருந்து பணிக்கு வராமலும் பொதுமக்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்காமலும் தொடர்ந்து இந்த வேலையை வேண்டாம் என்று கூறிவிட்டு சென்ற நிலையில் ஊராட்சி சார்பில் பலமுறை அவரிடத்திலும் அவரது உறவினரிடத்திலும் கேட்ட போதும் போதிய சம்பளம் இல்லை அதனால் எனக்கு இந்த வேலை வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றபடியால் அவருக்கு பதிலாக 2023 மே மாதம் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கணேசன் என்பவர் குடிநீர் விநியோகிப்பாளராக தேர்வு செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுக்கு மேலாக பணி செய்து வரும் நிலையில் தற்போது வேலையை விட்டு சென்ற கண்ணன் மீண்டும் வந்து எந்த ஒரு பணியும் செய்யாமல் கடந்த சில தினங்களாக அரசு வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு வருகிறார். இது ஊராட்சியின் நிதியை சுரண்டுவதற்கு திட்டமிடுவதாகும். இந்த தகவல் தெரிந்து அதிகாரிகளுக்கு புகார் கொடுத்து இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 29-03-2025 தேதியன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டதோடு போலியாக கையெழுத்திடும் நபர் மீது நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி அதற்கு உடந்தையாக செயல்படுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுருத்தியும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மேலும் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி தற்போது பணி செய்யும் கணேசன் என்பவரை மாற்றக்கூடாது என தெரிவித்த போது ஊராட்சி செயலர் அவனை மாற்றியே தீர்வேன் என கூறி கண்ணன் பணி செய்வது போல ஒரு GPS கேமரா பதிவும் எடுத்துள்ளார். இது சம்பந்தமாக பூதப்பாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது ,மேலும் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ஊராட்சி செயலர் மீதும் சட்டத்திற்கு புறம்பாக பணியே செய்யாமல் அரசு வருகை பதிவேட்டில் கையொப்பமிடும் கண்ணன் என்பவர் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு பொதுமக்களுக்கு குடிநீர் தங்குதடை இன்றி கிடைப்பதை உறுதிபடுத்தவும், நீதி விசாரணை வலியுறுத்தி ஊராட்சி மன்றம் முன்பு மூன்று கட்டங்களாக போராட்டம் நடத்த திட்டமிட்டு முதல்கட்டமாக ஊராட்சி அலுவலகம் முன்பும், 2-வது ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாகவும், 3-வதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகள் முன்பாகவம் நடத்த முடிவு செய்யப்பட்டு முதல் கட்டமாக ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஊர் மக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.