ஊட்டி. டிச. 24.
கலைஞர் கைவினை திட்டத்தில் கீழ் தொழிற் கடன் பெற்று பயனடையலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கைவினை கலைகள் மற்றும் தொழில்களில் உள்ளோருக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு கலைஞர் கைவினை திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை பிணையற்ற கடன் உதவி மற்றும் ரூ. 50,000 வரை மானியம் பெறலாம் மேலும் ஐந்து சதவீதம் வரை வட்டி மானியம் வழங்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தொழில் முனைவோர்களுக்கு திறன் மேம்பாட்டுக்கான சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் எந்த வகுப்பினராகவும் இருக்கலாம் இந்த திட்டத்தின் கீழ் கட்டட வேலைகள், மரவேலைப்பாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினைப் பொருட்கள், காலணிகள் தயாரித்தல், நகை தயாரித்தல், சிகை அலங்காரம், அழகுக்கலை, துணி நெய்தல், துணிகளில் கலை வேலைப்பாடுகள் செய்தல், கூடை முடைதல், கயிறு பாய் போன்றவை பின்னுதல், துடைப்பான் செய்தல், மண் பாண்டங்கள் செய்தல், சுடுமண் வேலைகள், பொம்மைகள் தயாரித்தல், படகு கட்டுமரம் தயாரித்தல், துணி வேலைபாடுகள், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடி வேலைப்பாடுகள் பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள் , உலோக வேலைப்பாடுகள், பாசிமணி வேலைப்பாடுகள், பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள் கைவினைப் பொருட்கள் மூங்கில், பிரம்பு, சணல் பனை வேலைபாடுகள், போன்ற தொழில்கள் துவங்க விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களைப் பெற 0423-2443947, 8925533997, 8925533997. ஆகிய எண்களில் தொடர்புகொண்டு விண்ணப்பிக்கலாம் என நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.