ஈரோடு மார்ச் 5
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு முதன்மை செயலாளர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முனைவர் கார்த்திகேயன் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில் களஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம், சோலார் பகுதியில் ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் புதியதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது 90 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, முதன்மை செயலாளர் கார்த்திகேயன்
பேருந்து நிலையப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணியினை விரைவாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, சோலார் பகுதியில் ரூ.18.48 கோடி மதிப்பீட்டில் புதியதாக ஒருங்கிணைந்த காய்கறி மற்றும் மளிகை வளாகம் அமைக்க முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதையும், மேலும், ஈரோடு மாநகராட்சி சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் பெரும்பள்ளம் ஓடையை மேம்படுத்தும் பணி ரூ.26.60 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருவதையும், முதன்மை செயலாளர். நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் பெரும்பள்ளம் ஓடையை மேம்படுத்தும் பணி தற்போது 80 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுகளின்போது. உதவி ஆட்சியர் (பயிற்சி) தராம கிருஷ்ணசாமி ஈரோடு மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) தனலட்சுமி, நகர்நல அலுவலர் கார்த்திகேயன், மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார். உதவி செயற்பொறியாளர் ஆனந்தன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.