நாகர்கோவில் பிப் 7
கன்னியாகுமரி மாவட்டம் கூட்டுறவு துறை சார்பில் முகிலன்விளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் முதல்வர் மருந்தகம், கல்குளம் வட்டம் வள்ளியாறு உள்ளிட்ட பகுதிகளை ஆட்சியர் அழகுமீனா, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து விதமான மருந்துகள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் முதல்வர் மருந்தகங்கள் செயல்படுத்தப்படும் தொழில் முனைவோர்கள் மருந்தாளுநர்களுக்கு ரூ.3 இலட்சம் அரசு மானியமாக வழங்கப்படுகிறது. கூட்டுறவுச் சங்கங்களுக்கு அரசு மானியத்தொகையாக ரூ.2 இலட்சம் வழங்கப்படுகிறது. அதில் 50 சதவீதம் உட்கட்டமைப்பு வசதிக்கும். 50 சதவீதம் மருந்துகளாகவும் வழங்கப்படுகிறது. இவ்வறிவிப்பினை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோரிடமிருந்து 36 முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதனடிப்படையில் முகிலன்விளையில் அமைக்கப்பட்டு வரும் முதல்வர் மருந்தகம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, இப்பணிகளை விரைந்து முடித்து வருகின்ற 15.02.2025 அன்று திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.