தஞ்சாவூர் ஜூலை.9.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாட்டு கோழி பண்ணை அமைக்க விரும்பு வோர் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கூறி உள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் விடுத்துள் ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:
தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டங்களில் கிராமப்புறங்க ளில் சிறிய அளவிலான நாட்டுக் கோழி 100 நாட்டு கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீதம் மானி யம் வழங்க திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. திட்டத்தில் ஆர்வம் திறமையும் கொண்ட கிராமப்புற பயனாளிகள் திட்டத்தை செயல்படு த்திட கோழி கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு , 4 மாதங்களுக்கு தேவை யான தீவன செலவு ஆகியவற்றிற் கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியமாகவும் ரூபாய்1 லட்சத்து 56 ஆயிரத்து 875 மட்டும் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் வழங்கப்படும்.
மேலும் திட்டத்திற்கு தேவையான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஓசூரில் இயங்கி வரும் மாவட்ட கால்நடை பண்ணையிலி ருந்து இலவசமாக வழங்கப்படும் திட்டத்தில் பயன் பெற விரும்பும் கிராமப்புற பயனாளிகள் மீதமுள்ள 50 சதவீத தொகையினை தங்களது பங்களிப்பாக சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ அல்லது வங்கி கடன் மூலமாகவோ திரட்ட வேண்டும்
கட்டுமான பணிகள் தீவனம் மற்றும் உபகரணங்கள் வாங்குதல் போன்ற அனைத்து செயல்முறை களும் பயனாளிகளால் செய்யப்பட வேண்டும். இத்திட்டத்தில் சேர விரும்பும் பயனாளிகள் கோழி கொட்டகை கட்ட குறைந்த பட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண் டும். இந்தப் பகுதி மனித குடியிருப் பில் இருந்து விலகி இருக்க வேண் டும்.
பயனாளிகள் கிராமத்தில் நிரந் தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். ஆதரவற்றோர் விதவைகள், திருநங்கைகள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட பழங்குடி யினத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் பயனாளிகள் ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா, அடங்கல் நகல், 50 சதவீத தொகை அளிப்பதற்கான ஆதார் ஆவணங்கள் வங்கி இருப்பு விவரம் (வங்கி கடன் ஒப்புதல் விவரம்) உடன் வருகின்ற 12ஆம் தேதிக்குள் அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்து வரிடம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது