சிவகங்கை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அவர்கள் சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட நியாயவிலைக்கடையில் தொடங்கி வைத்தார்.
உடன் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இராஜேந்திர பிரசாத், சிவகங்கை நகர்மன்றத்தலைவர் சி.எம்.துரை ஆனந்த், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.