மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றத்தில் உள்ள மண்டலம் 5 (மேற்கு) அலுவலகத்தில்
மேயர் தலைமையில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் சொத்துவரி தொடர்பாக 13 மனுக்களும், பாதாள சாக்கடை இணைப்பு வேண்டி 32 மனுக்களும், தெருவிளக்கு வசதி வேண்டி 5 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டி 6 மனுக்களும், சுகாதார வசதி வேண்டி 7 மனுக்களும் என மொத்தம் 63 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயர் நேரடியாக பெற்றார். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார். இம்முகாமில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் சுவிதா, உதவி ஆணையாளர் இராதா, செயற் பொறியாளர் (திட்டம்) மாலதி, நகர்நல அலுவலர் மரு.இந்திரா. மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் முத்து. சுகாதார அலுவலர் திருமால், உதவி வருவாய் அலுவலர் சித்ரா, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.