நீலகிரி. மார்.04
வெள்ளையர்களை எதிர்த்துப் போராடி கேரளாவில் பல பகுதிகளை ஆட்சி செய்த மன்னர் பழசிராஜா இவர் ஆங்கிலேயருக்கு எதிராக போரின்போது தங்கி இருந்த குகை ஒன்று நீலகிரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது கேரளாவில் கோட்டையம் மற்றும் மலபார் பகுதியில் மன்னராக கடந்த 1753 இல் ஆட்சி புரிந்தவர் பழசிராஜா நீலகிரி மாவட்டத்தில் முதுமலை நிலாக்கோட்டை , ஸ்ரீ மதுரை, சேரம்பாடி , மற்றும் வசந்தகுடி இவற்றுடன் கண்ணனூர் மற்றும் வயநாடு மாவட்டத்தின் தலைச்சேரி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி கோட்டைய மண்டலமாக இருந்தது ஆங்கிலேய அரசின் வரி வசூலுக்கு எதிராக குரல் கொடுத்ததுடன் ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராடியதால் மக்கள் இவருக்கு ஆதரவாளித்தனர் 1799இல் வயநாடு பகுதிக்கு இடம்பெயர்ந்தார் இப்போதுகளை தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார் தொடர்ந்து பழசி ராஜா தனது வீரர்களுடன் வனங்களில் தங்கி போர் புரிந்துள்ளார். மேலும் குறிச்சியா பழங்குடியின மக்களை ஒன்றிணைத்து ஆங்கிலேயர்கு எதிராகவும் போரில் பங்கேற்றுள்ளார். அப்போது கூடலூர் பகுதியி்ல் வசிக்கும் குரும்பர் பணியா பழங்குடியின மக்கள் இவருக்கு ஆதரவு அளித்துள்ளனர்.மன்னர் பழசிராஜா குகையில் தங்கி இருந்த பொழுது அவருடைய வீரர்களுக்கு சேர்த்து குரும்பா மக்கள் அவர்களுக்கு உணவு மற்றும் ஆயுதங்களை தயார் படுத்தி கொடுத்துள்ளனர். ஆங்கிலேயருக்கு எதிரான போருக்காக நீலகிரி மலைகளில் அதிக அளவில் தங்களுக்கான தலங்களை அவர் ஏற்படுத்தினார். அதில் பந்தலூர் அருகே கோட்டமலை மற்றும் நிலாக்கோட்டை பகுதிகளில் குகைகள் அமைத்து அதில் தனது படைகளுடன் தங்கி இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக கொரில்லா போர் தொடுத்தவர் பழசி ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி தங்கியிருந்த குகை ஒன்று தற்பொழுது பந்தளூர் அருகே சேரம்பாடி பகுதியில் செயல்படும் எஸ்டேட் தேயிலை தொழிற்சாலை அருகே சிறிய குழியாக காணப்பட்ட பகுதியை சீரமைத்து பார்த்தவுடன் வரலாற்று பதிவுகளை ஆய்வு செய்ததில் அது பழசிராஜா தங்கி இருந்த குகை என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த குகை சுமார் 30 மீட்டர் தூரம் சென்றதும் பிரிந்து இரண்டு பாதைகளாக செல்கிறது தற்போது குகையில் உள்பகுதியில் இருந்த புதர்கள் அகற்றப்பட்டு பார்வையாளர்கள் செல்லும் அளவிற்கு சீரமைக்கப்பட்டு வருகிறது இந்த குகையின் தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் பழசி ராஜாவின் ஆறாவது தலைமுறையை சேர்ந்த கொச்சூர் தம்புராட்டி சுபாவர்மா அவரது கணவர் டாக்டர் கிஷோர் ஆகியோர் திறந்து வைத்து பழசி ராஜாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள். . எஸ்டேட் நிர்வாகம் சார்பில் தொழிலாளர்கள் மன்னர் வாரிசுகளுக்கு பசுந்தேயிலையில் மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர்களின் மூதாதையர்களை நினைவு கூர்ந்து அந்த பகுதிகளை பார்வையிட்டனர். இந்த குகை 1791 1801 ஆம் ஆண்டு கால கட்டங்களில் அமைக்கப்பட்டது கொரில்லா போர் தளமாக செயல்பட்டதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.