கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க ஒசூர் மண்டலம் சார்பாக “Coffee with Collector” (காபி வித் கலெக்டர்) என்னும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு, . அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புத்தொழில் நிறுவனங்கள் வேகமாக உருவாகி வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தை பயன்படுத்தி உங்கள் நிறுவனங்களை பெரும் நிறுவனமாக உருவாக்கிக் கொள்ளுங்கள்.
இக்கூட்டத்தில் புத்தொழில் நிறுவனங்கள், இளந்தொழில் முனைவோர், கல்லூரி
முதல்வர்கள் மற்றும் தொழில் ஆர்வமுள்ள இளைஞர்கள் சுமார் 100 மேற்பட்டோர் ஆர்வமுடன்
கலந்துக் கொண்டு உள்ளீர்கள். மேலும், தங்கள் நிறுவனங்கள் குறித்தும் புத்தொழில்
செய்வதற்கு உள்ள சாதகங்கள் மற்றும் பாதகங்களைப் பற்றியும், என்ன தேவை என்பதையும்
தெரிவித்துள்ளீர்கள். உங்கள் தேவைகளின் அடிப்படையில் அந்தந்த துறைசார் அலுவலர்கள்
மூலமாக வேண்டிய அனைத்து உதவிகளும் செய்யப்படும். அதேபோல விண்வெளி
தொழில்நுட்ப நிறுவனம், தானியங்கி டிரோன் நிறுவனங்களும், விவசாயம் சார்ந்த தொழில்
நிறுவனங்கள் மின் வாகன உற்பத்தி நிறுவனங்களும் இம்மாவட்டத்தில் விரைவில்
தொடங்குவதாக புத்தொழில் முனைவோர் தெரிவித்துள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, புத்தொழில் அட்டைக்காக விண்ணப்பித்திருந்த நிறுவனங்களுக்கு புத்தொழில் அட்டையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய மேலாளர் .பிரசன்ன பாலமுருகன், உதவி இயக்குனர் .ராம மூர்த்தி, அக்ரி சக்தி நிறுவனர் .செல்வ முரளி, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க ஒசூர் மண்டல திட்ட மேலாளர் .ஜிஜின் துரை மற்றும் இணை அலுவலர் .தீபக் ராஜு ஆகியோர் கலந்துக் கொண்டனர்.