குலசேகரம், நவ- 30
திருவட்டாறு அருகே தோட்டவாரம் பகுதியை சேர்ந்தவர் சௌமியா (19) இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் சௌமியா கல்லூரிக்கு செல்வதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு சென்றார். சென்ற சிறிது நேரத்தில் அவரது தாய் அகிலா என்பவரின் செல்போனுக்கு மெசேஜ் ஒன்று அனுப்பி இருந்தார். அதில் என்னை தேட வேண்டாம் என்று கூறியிருந்தார்.
இதை அடுத்து சௌமியாவின் தாயார் அகிலா கல்லூரிக்கு சென்று மகளை பார்த்த போது அவர் கல்லூரிக்கு வராதது தெரிய வந்தது. மேலும் பல்வேறு இடங்களை தேடியும் சௌமியா தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து அகிலா திருவட்டாறு போலீசில் மகளை கண்டுபிடித்து தர புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சௌமியாவை தேடி வருகின்றனர்.