நாகர்கோவில் ஜூன் 2
குமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியில் தென்மேற்கு பருவக்காற்று வீசி வருவதால் காற்றாலை மின் உற்பத்தி ஒரே நாளில் பல மடங்கு அதிகரிப்பு.
காற்று அதிகமாக வீசும் அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியாவிற்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிக காற்று வீசும் இரண்டாவது இடத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் தென்மேற்கு பருவ காற்று சீசன் தொடங்கியதால் ஆயிரம் மெகாவாட்டுக்கும் குறைவாக மின் உற்பத்தி நடந்த காற்றாலையில் இருந்து 3500 மெகாவாட்டாக மின்சாரம் உற்பத்தி பலமடங்கு அதிகரித்து உள்ளது.
அணுமின் நிலையம், அனல் மின் நிலையம், நீர் மின் நிலையங்கள், காற்றாலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது கன்னியாகுமரி மாவட்ட்த்திற்கு ஆண்டிற்கு தென் மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரு பருவக்காற்றுகள் இயற்கையாகவே கொண்டு உள்ளது. காற்று அதிகமாக வீசும் அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியாவிற்கு அடுத்தபடியாக உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ள ஆரல்வாய்மொழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது தென்மேற்கு பருவ காற்று சீசன் தொடங்கி உள்ளது . இந்தியாவில் ஆரல்வாய்மொழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் காற்றாலை மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். ஆரல்வாய்மொழி, முப்பந்தால், சென்பகரமன்புதூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலைகள் இயங்கி வருகின்றன. 225 கிலோ வாட், 400 கிலோவாட், 500 கிலோவாட், உள்ளிட்ட பல்வேறு திறன் கொண்ட காற்றாலை இயந்திரங்கள் மூலம் காற்றாலை மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தென்மேற்கு பருவ காற்று சீசன் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இறுதியில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை பலத்த காற்று வீசும் காலங்களாகும். இக்கால கட்டங்களில் அதிக அளவு மின் உற்பத்தி இப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு காற்றாலை மூலம் சுமார் 3500 யுனிட் வரை மின்சாரம் உற்பத்தி தொடங்கி உள்ளது . இந்த சீசனில் மட்டும் 12 ஆயிரம் மில்லியன் யுனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய தனியார் காற்றாலைகள் நிர்வாகங்கள் திட்டமிட்டு உள்ளன. தமிழக அரசு மின் வாரிய துறையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கி பிற மாநிலங்களுக்கும் மின்சாரம் விற்பனை செய்ய முடியும் என காற்றாலை தரப்பில் கூறபடுகிறது.