சேலம் ஜூலை 02 – சேலம் மத்திய மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் ஷேக் முகமது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமை பிரதிநிதி சாதிக் பாட்ஷா கலந்துகொண்டு கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் மரணத்திற்கு காரணமான அதிகாரிகளை பணி நீக்கம் செய்திட வலியுறுத்தியும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரியும், தமிழகம் முழுவதிலும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டிய கண்டன கோஷங்கள் எழுப்பினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், தமுமுக மாவட்ட செயலாளர் ஷேக் ஜலால், பொருளாளர் இம்ரான் அலி,மாநில செயற்குழு உறுப்பினர் சையத் சலாவுத்தீன், மாவட்ட துணை தலைவர் முகமது ரபிக், தமுமுக மாவட்டத் துணைச் செயலாளர் சேவகன் இப்ராஹிம், மமக மாவட்ட துணைச் செயலாளர் சல்மான், யூனுஸ் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics