இராமநாதபுரம் ஜூன் 22-
பேங்க் ஆப் இந்தியா வங்கி, சர்வோதயா அறக்கட்டளை ஏற்பாட்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரம் D பிளாக் அருகில் உள்ள GS மண்டபத்தில் நடை பெற்றது. இதில் 600 சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 20 கோடி கடன் பேங்க் ஆப் இந்தியா வங்கி மதுரை மண்டலம் மூலமாக வழங்கப்பட்டது. மேலும் இவ்விழாவில் பிரதான் நிறுவனம் மற்றும இண்டஸ்இன்ட் வங்கியின் (IBL) திட்டக் கிளைக்குட்பட்ட 100 சர்வோதயா சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 3 கோடி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேங்க் ஆப் இந்தியாவின் பொது மேலாளர் மும்பை நகுலா பெஹெரா அவர்களும், கள பொது மேலாளர் சென்னை முகேஷ் சர்மா அவர்களும் மண்டலா மேலாளர் மதுரை கிசோர் குமார் அவர்களும் சர்வோதயா அறக்கட்டளையின் முதன்மை நிர்வாக இயக்குனர் ராஜன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு சர்வோதயா அறக்கட்டளை சுய உதவி குழு பெண்கள் சுமார் 750 பேர் கலந்து கொண்டு ரூபாய் 20 கோடிக்கான காசோலையை பெற்று கொண்டனர்.இந்நிகழ்ச்சியின் இறுதியில் வீரபாபு அவர்கள் பேங்க் ஆப் இந்தியா மதுரை மணடலம் நன்றியுரை வழங்கினார்.
சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics