சேலம் மூன்று ரோடு பகுதியில் உள்ள பிரபல நியூரோ பவுண்டேஷன் மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவமனையில் மூளை நரம்பியல் மற்றும் தண்டுவடம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் சேலம் நியூரோ பவுண்டேஷன் மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு மருத்துவமனையில் பக்கவாத சிகிச்சைக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு துவக்க விழா நடைபெற்றது. மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த அதிநவீன தீவிர சிகிச்சை
மைய திறப்பு விழாவில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய சிகிச்சை பிரிவினை துவக்கி வைத்தார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பிரிவில் சிறப்பு அம்சங்கள் குறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் நடராஜன் சேலம் மாநகராட்சி ஆணையாளருக்கு எடுத்துரைத்தார்.மேலும்
இந்த நிகழ்ச்சியில் நியூரோ பவுண்டேசன் மேனேஜிங் டைரக்டர் டாக்டர்.நடராஜன்,
மயக்கவியல் நிபுணர் டாக்டர். சேகர், மூளை நரம்பியல் நிபுணர்கள் பிரபாகரன், பிரத்தீஷ்குமார்,
டாக்டர்.நிஷாமோல் மற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
அதிநவீன பக்கவாத தீவிர சிகிச்சை பிரிவு துவக்கம்.

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics