நீலகிரி. டிசம். 01.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு இன்டர்போல் மற்றும் பிஎஸ்என்எல் தொடர்புடைய விசாரணைகள் நடந்து வரும் நிலையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணை அதிகாரி வளையத்திற்குள் வரும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்த் தரப்பு சாட்சியாகவோ அல்லது அரசு தரப்பு சாட்சியாகவோ முடிவு செய்யும் பட்சத்தில் விசாரணைக்கு அழைக்ககும் பட்சத்தில் எப்போது வேணும் என்றாலும் விசாரிக்கப்படலாம்……..
ஆனால் தற்பொழுது விசாரணையில் யார் யாரெல்லாம் அரசு தரப்பு சாட்சியாகவோ எதிர்தரப்பு சாட்சியாகவோ விசாரணை செய்யலாம் என முடிவு எட்டப்படாத நிலையில் அவரின் மேல் உள்ள விசாரணை குறித்து முடிவெடுக்க வேண்டாம் என ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம்.
என அரசு தரப்பு வழக்கறிஞரான
ஷாஜகான் தெரிவித்தார்.
கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறும் நிலையில்
இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வாளையார் மனோஜ் மற்றும் சையான் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முரளிதரன் வழக்கினை விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோரும் ஆஜராகினர்.
மேலும் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் மற்றும் சிபிசிஐடி போலீசார் நேரில் வருகை புரிந்தனர்.
மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முரளிதரன் வழக்கினை விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இன்டர்போல் விசாரணை நடைபெற்று வருவதாகவும், தற்போது நடைபெற்று வரும் புலன் விசாரணை மற்றும் சாட்சிகளிடம் விசாரித்து வருவது குறித்தும் நீதிபதியிடம் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் தெரிவிக்கையில்,
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு இன்டர்போல் மற்றும் பிஎஸ்என்எல் தொடர்புடைய விசாரணைகள் நடந்து வரும் நிலையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணை அதிகாரி வளையத்திற்குள் வரும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்த் தரப்பு சாட்சியாகவோ அல்லது அரசு தரப்பு சாட்சியாகவோ முடிவு செய்யும் பட்சத்தில் விசாரணைக்கு அழைக்ககும் பட்சத்தில் எப்போது வேணும் என்றாலும் விசாரிக்கப்படலாம்.
ஆனால் தற்பொழுது விசாரணையில் யார் யாரெல்லாம் அரசு தரப்பு சாட்சியாகவோ எதிர்தரப்பு சாட்சியாகவோ விசாரணை செய்யலாம் என முடிவு எட்டப்படாத நிலையில் அவரின் மேல் உள்ள விசாரணை குறித்து முடிவெடுக்க வேண்டாம் என ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம்.
என கூறினார்.