திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக
திண்டுக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்ட்ராக்ட் கிளப் பதவியேற்பு விழா, கல்வி, மற்றும் விளையாட்டு விருது வழங்கும் விழா.
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக இன்ட்ராக்ட் கிளப் பதவியேற்பு விழா,கல்வி மற்றும் விளையாட்டு விருது வழங்கும் விழா நிகழ்ச்சி திண்டுக்கல் பழனி ரோட்டில் உள்ள திண்டுக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.H.புருஷோத்தமன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் செயலாளர் Rtn.P.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக Rtn.B.வெங்கடேஷ், பள்ளியின் தலைமை ஆசிரியை Tmt.K.P.சாந்தி, திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் துணை ஆளுநர் Rtn.M.செல்வகனி, முன்னாள் செயலாளர் Rtn.கலைச்செல்வன், முன்னாள் மாணவர் தலைவர் G.சுப்புராஜ், மேற்கு ரோட்டரி சங்கத்தின் நிர்வாகி Rtn.ரெங்கையா
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கும்,தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை போடாமல் வந்த ஆசிரியர்களுக்கும், சிறந்த ஆசிரியர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்கள். அதனை தொடர்ந்து இன்ட்ராக்ட் கிளப்பின் தலைவராக பள்ளி மாணவர் S.நிவாஸ், செயலாளராக பள்ளி மாணவர் M.முத்தையா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியின் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மேற்கு
ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியின் முடிவில் இன்ட்ராக்ட் கிளப் ஒருங்கிணைப்பாளர் Tmt.C.உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.