ஈரோடு ஜன 8
ஈரோடு பூந்துறை ரோடு செட்டிபாளையம் ஸ்டேட் வங்கி நகர் பகுதியில் என் ஆர் மற்றும் ஆர்சிசிஎல் கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம் என் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமானது.
இந்த நிறுவனம் தமிழ்நாடு கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் அரசு கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்தம் செய்து குடிநீர் கட்டுமான பணிகள் சாலை பணிகள் உள் கட்டமைப்பு வசதிகள் அரசு கட்டிடங்கள் என அனைத்து வகை பணிகளையும் செய்து வருகிறது
கோவையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று ஈரோடு பூந்துறை ரோட்டில் உள்ள என் ஆர் கட்டுமான நிறுவன அலுவலகத்தில் சோதனை செய்தனர் அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் கணினி பதிவுகளை சோதனை செய்தனர் .
இந்த நிறுவனத்திற்கு சொந்தமான சேலம் திருச்சி உள்பட தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் 26 அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை நடந்தது வருமானவரி ஏய்ப்பு காரணமாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது என் ஆர் கட்டுமான நிறுவனம் மற்றும் ஆர் சி சி எல் நிறுவனத்தின் உரிமையாளர் என் ராமலிங்கம் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.