தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அரசு உத்தரவிட்டுள்ளது என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் துணை ஆணையர் ரங்க ராஜன், தலைமையில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டுராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் பேசியதாவது “மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி கேமரா கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுகிறேன் நீங்கள் பிளாஸ்டிக் பைகளை பக்கிள் ஓடைகளில் போடாதீர்கள் ஏனென்றால் கழிவுநீர் செல்வதில் சிரமங்கள் ஏற்படுகிறது. பிளாஸ்டிக் உபயோகிப்பது தவிர்த்து விடுங்கள்.
16, 17, 18 ஆகிய வார்டுகளில் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கும் பணி 90 சதவீதம் முடிந்துவிட்டது 10% பணிகள் மட்டும் நடக்க வேண்டும். இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும் தூத்துக்குடி மாநகரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரோடுகளில் சுற்றி தெரியும் கால்நடைகளால் விபத்து அதிகளவில் ஏற்படுகிறது. தற்போது இதுவரை 50 மாடுகள் பிடிபட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து கால்நடைகள் ரோடுகளில் போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்
முகாமில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சந்தனராஜ் செயலாளர் கசின் ஆகியோர் மேயரிடம் அளித்த மனுவில் “தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் பயணிகளின் வசதிக்காக அங்கு ஏடிஎம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியுடன் பேசி வருகிறோம் விரைவில் ஏடிஎம் திறக்க ஏற்பாடு செய்யப்படும் என்று மேயர் தெரிவித்தார்.
முகாமில் மாநகராட்சி துணை மாநகரப் பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் ஸ்டான்லி பாக்கியநாதன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சந்திரபோஸ், கனகராஜ், ராமர் ,விஜயலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, முன்னாள் கவுன்சிலர் கந்தசாமி, மேயரின் உதவியாளர் ரமேஷ், ஜேஸ்பர், பகுதி செயலாளர் பிரபாகரன் ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.