கிருஷ்ணகிரி:அக்:10, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கந்திகுப்பம் பகுதியினைச் சேர்ந்தவர் வெங்கடேசன் இவர் கிருஷ்ணகிரி நகர கிளையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு பேருந்து ஓட்டுநராக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட கிளை மேலாளர் தமிழரசு தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், பணி செய்ய விடாமலும், பணி மாறுதலுக்கும் உத்தரவு தராமல் தொடர்ச்சியாக அலைக்கழித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மனமுடைந்த டிரைவர் வெங்கடேசன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தற்கொலைக்கு முயன்றதாகவும், இதனை அங்கிருந்த சிலர் பார்த்துவிட்டு அவரது குடும்பத்திற்கு தகவலை தெரிவித்த நிலையில், கிருஷ்ணகிரி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் அனைத்திற்கும் கிளை மேலாளர்தான் காரணம் என வெங்கடேசனின் உறவினர்கள் கூறுகின்றனர். இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை முயற்சி

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics