நாகர்கோவில் செப் 26
கன்னியாகுமரி மாவட்டம் மணவாள குறிச்சியில் 1965 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது தொடங்கப்பட்ட அபூர்வ மணல் ஆலை நிறுவனத்தின் தற்போது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்கும் வகையில் அதன் விரிவாக்க திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியே போராட்டத்தில் களம் இறங்குவது வேடிக்கையாக உள்ளதாக நாகர்கோவிலில் முன்னாள் மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்
மணல் ஆலையால் புற்று நோய் மக்களுக்கு ஏற்படும் என பிரச்சாரம் செய்கிறார்கள் ஆனால் அந்த ஆலையில் நேரிடையாக பணியாற்றும் ஊழியர்களுக்கு புற்று நோய் வரவில்லை என பொய் பிரச்சாத்திற்கு விளக்கம் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட சேரியில் பா.ஜ.க யின் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை நேற்று தொடங்கி வைத்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், 1965 ஆம் ஆண்டு மணவாள குறிச்சியில் மத்திய அரசுக்கு சொந்தமான அபூர்வ மணல் ஆலை காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தொடங்கப்பட்டது தற்போது இளைஞர்களுக்கும் மீனவர்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் மணல் ஆலையின் விரிவாக்க திட்டத்திற்கு அதே காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் களம் இறங்கி வருவது வேடிக்கையாக உள்ளதாகவும், உள்ளுரில் யாருக்கும் வேலை கிடைக்க கூடாது என்ற என்னத்தில் இந்த விவாக்க திட்டத்தை காங்கிரஸ் கட்சி எதிர்பதாகவும், இந்த மணல் ஆலையில் 75% பேர்கள் மீனவர்கள் தான் வேலை பார்த்து வருகிறார்கள் ஆனால் ஆலை விரிவாக்க திட்டத்திற்கு மீனவர்களை தூண்டி விட்டு மத தலைவர்களும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் சூழ்ச்சி செய்து வருவதாகவும் கூறிய அவர், சில ஆண்டுகளுக்கு முன் குமரி மாவட்டத்தில் மத்திய அரசு 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொண்டு வந்த துறைமுக திட்டத்தையும் எதிர்த்து இல்லாமல் செய்தார்கள் என பல்வேறு குற்றசாட்டுகளை பொன். ராதா கிருஷ்ணன் முன் வைத்தார்.